சம்பந்தமில்லாத வார்த்தைகள் பேசக்கூடாது: நயன்தாரா

சிம்புவுடன் நயன்தாராவை மீண்டும் ஜோடி சேர்ப்பதற்குள் அப்பட டைரக்டர் பட்டபாடு சொல்லி மாளாது. எப்படியோ ஒரு பரபரப்பை கூட்ட வேண்டும் என்று நினைத்து இப்போது ஏழரையை கூட்டியுள்ளார் என்றே தெரிகிறது. அதாகப்பட்டது, சமீபத்தில் நயன்தாராவை சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரெனறு ஸ்பாட்டுக்குள் என்ட்ரி கொடுத்தாராம் சிம்பு.

அதைப்பார்த்து கொதித்து விட்டாராம் நயன்தாரா. அவருக்குத்தான் இன்றைக்கு ஷாட்டே இல்லையே அப்புறம் எதுக்கும் ஸ்பாட்டுக்கு வரனும் என்று டைரக்டரிடம் கேள்வி கேட்டாராம். அதோடு, மூடுஅவுட்டான அம்மணி, சும்மா சும்மா வந்து தொல்லை கொடுப்பார் என்பதற்காகத்தான் அவருடன் மீண்டும் இணைய மறுத்தேன். நீங்கள் வற்புறுத்தியதால்தான் ஒத்துக்கொண்டேன்.

ஆனால், நான் நினைத்தது போலவே இப்போது எல்லாமே நடக்கிறது என்று கோபித்துக்கொண்டு கேரவனுக்குள் சென்று முடங்கிக்கொண்டாராம். இதனால் நொந்து போன டைரக்டர், சிம்புவிடம் பக்குவமாக பேசி அவரை ஸ்பாட்டை விட்டே வெளியேற்றிய பிறகுதான் அம்மணி கேரவனுக்குள் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாராம்.

அதுமட்டுமின்றி, மேற்படி நடிகருடன் இணைந்து நடிக்கிற காட்சிகளின்போதும், பேச வேண்டிய வசனத்தை தவிர சம்பந்தமில்லாத வார்த்தைகள் ஒன்றுகூட என்னிடம் அவர் பேசக்கூடாது. அப்படி பேசினால், அப்போதே ஸ்பாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளாராம் நயன்தாரா.

Share |
Previous Page Next Page HOME