பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை கையாளும் பிரபலங்கள் உணர்ச்சி வசப்பட்டு எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது. குஷ்பு, சமந்தா, சித்தார்த் போன்றவர்கள் அரசியல் விஷயங்களை கூட அஞ்சாமல் போட்டுத் தாக்குகிறார்கள். இதனால் கடும் விமர்சனங்களையும் சந்திக்கிறார்கள்.
இந்த நிலையில் எல்லார்க்கும் நல்லவர் என்று பெயரெடுத்த அஜீத்தின் மனைவி ஷாலினி ஒரு விஷயத்தை எழுதப்போக, “இவ்வளவு நம்பிக்கை தேவைதான்.
ஆனால் இது அதிக பிரசங்கித்தனமா இருக்கிறதே?” என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். சிலர் இதை அவருக்கே சுட்டிக்காட்டவும் செய்தார்களாம். அப்படியென்ன சொல்லியிருக்கிறார் ஷாலினி?
ஜனவரி 10ம் தேதி ‘வீரம்’ வெளியாகிறது. அன்று அறிவிக்கப்படாத அரசு விடுமுறைதான் எல்லாருக்கும் என்று எழுதியிருக்கிறார். ஆனால் ஷாலினியோ, “ஜாலியாக ஒரு கருத்தை வெளியிட்டேனே தவிர, இது உள் அர்த்தம் என எதுவுமே இல்லை, நம்புங்கள்,” என்று நெருக்கமானவர்களிடம் விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறாராம்.
இந்த நிலையில் எல்லார்க்கும் நல்லவர் என்று பெயரெடுத்த அஜீத்தின் மனைவி ஷாலினி ஒரு விஷயத்தை எழுதப்போக, “இவ்வளவு நம்பிக்கை தேவைதான்.
ஆனால் இது அதிக பிரசங்கித்தனமா இருக்கிறதே?” என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். சிலர் இதை அவருக்கே சுட்டிக்காட்டவும் செய்தார்களாம். அப்படியென்ன சொல்லியிருக்கிறார் ஷாலினி?
ஜனவரி 10ம் தேதி ‘வீரம்’ வெளியாகிறது. அன்று அறிவிக்கப்படாத அரசு விடுமுறைதான் எல்லாருக்கும் என்று எழுதியிருக்கிறார். ஆனால் ஷாலினியோ, “ஜாலியாக ஒரு கருத்தை வெளியிட்டேனே தவிர, இது உள் அர்த்தம் என எதுவுமே இல்லை, நம்புங்கள்,” என்று நெருக்கமானவர்களிடம் விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறாராம்.