இது இப்படி என்றால், இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனா என்ற இடத்தில் நடந்த இன்னொரு சம்பவம் மனதை பதற வைக்கும்படியாக உள்ளது. ஐந்து வயது ஷெஃபீக் என்ற சிறுவனை அவனது தந்தையும், அவனது இரண்டாம் தாயும் சேர்ந்து கொடூரமாக தாக்க, அவனது தலை பிளந்தவாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உயிருக்கு போராடி வருகிறான்.
இந்த இரண்டு சம்பவங்களும் கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இந்த கொடூரமான செயல்களை கண்டித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தனது மைக்ரோ ப்ளாக்கில் மிகுந்த வேதனையோடு, ‘அச்சன்டெ சுடு கண்ணீர்’ (ஒரு தந்தையின் கண்ணீர்) என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.
‘‘ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகளை நோகடிக்காதே’’ என்று பொருள்படும் படி அவர் எழுதியிருப்பதை மலையாளம் படிக்கத் தெரிந்தவர்கள் படித்து பாருங்கள்! பிள்ளைகளை கொடுமைப்படுத்துவோர் நிச்சயம் மனம் திருந்துவர்!