தனுஷுக்கு விருது கிடைத்தது எப்படி?

'வொய் திஸ் கொலவெறி' பாடலுக்காக சிறந்த பாடகர் விருது கிடைதிருக்கிறது தனுஷுக்கு.

 இதை நினைத்து யாரும் கமுக்கமாக சிரிக்க வேண்டியதில்லை. (வாய்விட்டே சிரிக்கலாம்னு சொல்ல வந்தேன்) உலகம் முழுக்க இந்த பாடல் சென்று சேரக் காரணம் குரல் அல்ல, ட்யூன் என்பதுதான் உண்மை. நியாயமாக இந்த விருது இசையமைப்பாளர் அனிருத்துக்கு அல்லவா போய் சேர்ந்திருக்க வேண்டும்? அது போகட்டும்...

இந்த விருதை கொடுத்த அந்த ஆங்கில பத்திரிகை ஒவ்வொரு முறை விருதை அறிவிக்கும்போதும் கட்டாயம் தனுஷுக்கும் ஒரு விருதை ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள். பல ஆண்டுகளாக இப்பழக்கம் தொடர்கிறது. இந்த முறையும் அப்படியே! ஏனிப்படி? சந்தேக சல்லடையை சலித்து பார்க்காமல் விட முடியாதே. வேறொன்றுமில்லை, இப்பத்திரிகையின் தமிழ் கன்டென்ட் ஆசிரியர்தான் தனுஷின் கால்ஷீட் மேனேஜர்!

வேப்பிலை சாறுல முக்கியெடுத்த வெல்லம்தான் இந்த விருது...

Share |
Previous Page Next Page HOME