காதல் கிசு கிசுக்களுக்கு முற்று புள்ளி வைக்க சித்தார்த்தின் உதவியை நாடிய சமந்தா !!

தற்போது தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. ஆனால், இவரையும், சித்தார்த்தையும் இணைத்து காதல், கல்யாணம் என்று செய்திகள் பரவியதால், பல ஹீரோக்கள் மட்டுமின்றி படாதிபதிகளுக்குமே சமந்தா மீது ஒருவித அதிருப்தியான சூழல் நிலவி வந்தது. இதனால் ஆரம்பத்தில் கிசுகிசுக்களை கண்டுகொள்ளாமல் இருந்த சமந்தா, தன்னைப்பற்றி அதிருப்தியான சூழல் உருவாகியிருப்பதை தெரிந்து கொண்டபோது இந்த கிசுகிசுவில் துளியும் உண்மையில்லை என்று சொல்லிப்பார்த்தார். ஆனால், அதை யாரும் செவி கொடுத்து கேட்கவில்லை. இதையடுத்து, பேசிக்கொண்டிருந்த சில மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் வேறு நடிகைகள் பக்கம் திரும்ப தயாராகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த சமந்தா, இதுபற்றி இனி நாம் சொன்னால் நம்ப மாட்டார்கள். அதனால் சம்பந்தப்பட்ட நடிகரையே சொல்ல வைப்போம் என்று முடிவு செய்து சித்தார்த்திடம் சென்னை வந்து முறையிட்டார்.

அதைத்தொடர்ந்து, சமந்தா சொன்ன அந்த அதிருப்தியாளர்களை ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு, சமந்தாவை என்னுடன் இணைத்து எழுந்த காதல் கிசுகிசுவில் உண்மையில்லை. அதனால் அவரை வைத்து நீங்கள் தொடர்ந்து படம் தயாரிக்கலாம். நானும் ஒரு சினிமாக்காரன் என்ற முறையில் இதை சொல்கிறேன் என்று பக்குவமாக சொன்னாராம். அதன்பிறகுதான் ஆந்திர படாதிபதிகளுக்கு சமந்தா மீதிருந்த அதிருப்தி விலகியதாம்.

அதனால், இப்போது மேலும் சில புதிய படங்களை கைப்பற்றி ஆந்திராவில் இன்னும் ஆழக்காலூன்றி விட்டாராம் சமந்தா.

Share |
Previous Page Next Page HOME