அஜீத் கூட நடிச்சதுதான் கடைசிப்படம். இனி, நடிக்கற ஐடியாவே இல்ல..: லைலா

சென்னை: ரசிகர்களால் ‘குல்பி' என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை லைலா, ‘இனி மீண்டும் நடிக்கும் ஐடியா இல்லை' எனக் கூறி, திருமணத்திற்குப் பிறகு அவர் மீண்டும் நடிக்கப்போகிறார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒரு காலத்தில் கதாநாயகியாக வலம் வந்த நடிகைகள், திருமணத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது சகஜமான ஒன்று தான். ஆனால், என்ன கதாநாயகியாக நடித்த நாயகர்களுக்கே அம்மா, அக்கா, அண்ணி என வேஷம் கட்டுவார்கள். அந்த வரிசையில் கல்யாணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்ட நடிகை லைலா மீண்டும் நடிக்க வருகிறார் என சமீபத்தில் ஒரு செய்தி உலா வந்தது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள லைலா கூறியிருப்பதாவது...

நான் கடைசியாக நடித்தது அஜீத் படம் தான். திருப்பதியில் கௌரவத் தோற்றத்தில் அஜீத்துடன் நடித்திருந்தேன். 

தற்போது நான் மீண்டும் நடிக்கப் போவதாகவும், படம் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், எனக்கு அத்தகைய எண்ணம் சிறிதும் இல்லை. 

மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டேன். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. 

எனவே, மீண்டும் படங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு துளியும் இல்லை' என லைலா தெரிவித்துள்ளார். 


Share |
Previous Page Next Page HOME