பேரரசு இயக்கத்தில் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கும் “திகார்”

காட்சன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் “திகார்” படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் அலெக்ஸாண்டர் என்ற பிரபலமான தாதா வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நடிக்கிறார்.
மற்றும் இளம் கதாநாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார்.
அகன்ஷாபூரி, கிருதிபாபட் ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் காதல்தண்டபாணி, பாண்டிரவி, எம்.எஸ்.பாஸ்கர்,மனோஜ், கே.ஜெயன்,ரியாஸ்கான்,தேவன்,கிரேன் மனோகர், சிசர்மனோகர், கொட்டாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சேகர் .வி.ஜோசப்
இசை – ஆர்.கே.சபீர்
பாடல்கள் – பேரரசு , கலை – வல்சன்
எடிட்டிங் – வி.ஜெய்சங்கர் ,ஸ்டன்ட் – தீபொறி நித்யா
நடனம் – RDX
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பேரரசு
தயாரிப்பு – காட்சன் பிலிம்ஸ்
படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்ட போது…..
பாண்டிச்சேரியில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்கு மூன்று அதிரடி சண்டை காட்சிகள் , ஒரு பாடல் காட்சி மற்றும் படத்தில் இடம்பெறும் இருபது காட்சிகள் படமாக்கப்பட்டது.
பார்த்திபன் – மும்பை வில்லன் ஜியாத் உடன் மோதும் அதிபயங்கர சண்டை காட்சிகளும் அங்கே படமானது. பார்த்திபன் – பிரியங்கா டூயட் காட்சி ஒன்றும் அங்கே படமாக்கப் பட்டது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இதற்கு முன்பு பார்த்திபன் ஏற்றிராத வித்தியாசமான வேடம் இந்த அலெக்ஸாண்டர் வேடம். நகரத்தையே தன் கைகுள் வைத்து ஆட்டிப்படைக்கும் தாதா வேடம் பார்த்திபனுக்கு என்றார் பேரரசு.

Share |
Previous Page Next Page HOME