அதர்வாவை வீட்டுக்கு அனுப்பிய டைரக்டர்

அதர்வாவுக்கு சமீப காலமாக நேரமே சரியில்லை.  அதை தெரிந்து கொள்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள். அப்படி தெரிந்தால்தான் அதர்வாவின் நேரம் ஏன் சரியில்லை என்பது தெரியும்.

கொடுக்கறது ஒண்ணு. அப்புறம் எடுக்கறது இன்னொன்று என்று பட்ஜெட் விஷயத்தில் தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும் இயக்குனர்களை எப்படி கட்டுப்படுத்துவது? இதுதான் இன்றைய தினத்தில் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் ஏற்பட்டிருக்கும் பெரும் கவலை.

அப்படி ஒரு கவலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தை தள்ளியிருக்கிறாராம் டைரக்டர் யுவராஜ். அதர்வா நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ என்கிற படத்தை இயக்கி வரும் இவர், ஆரம்பத்தில் கொடுத்த பட்ஜெட் மூன்றரை கோடியாம்.

முதல் ஷெட்யூல் முடிந்து ஆபிசுக்கு வந்திறங்கிய பின் கணக்கு பார்த்தால் இப்பவே அதில் முக்கால் பங்கு காலி. கூட்டி கழித்து கணக்கு போட்ட ஏஜிஎஸ் படம் முடியும்போது பட்ஜெட் இரண்டு மடங்காகலாம் என்று முடிவு செய்ததாம்.

அப்புறம்...? வேறென்ன. அதர்வா வீட்டிலிருக்கிறார். தேதிகள் வீணாகிக் கொண்டிருக்கின்றன.

Share |
Previous Page Next Page HOME