சென்னை துறைமுகத்தில் படகில் நடந்த நான்தாண்டா ஆடியோ வெளியீடு

நான்தாண்டா படத்தின் ஆடியோ வெளியீடு வித்தியாசமாக நடந்துள்ளது. நாகர்ஜுனா நடித்த “உதயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து, அதற்கு பின்னர் பல்வேறு ஹிந்தி படங்களின் மூலம் உலகளவில் பேசபட்ட இயக்குனர் ராம் கோபால் வர்மா. அவரது இயக்கத்தில் சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், தேவி ஸ்ரீ தேவி சதீஷ் தயாரித்திருக்கும் படம்தான் நான்தாண்டா. இதில் எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நாயகனாகவும், அனாமிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். நிதின் ராய்குவார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ”நான்  தாண்டா” திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் வித்தியாசமான முறையில் நடந்துள்ளது. ஆமாங்க வேறு எங்கும் நடக்காத வகையில் அதுவும் சென்னை துறைமுகத்தில் ஒரு படகில் வைத்து நான்தாண்டா ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ராம் கோபால் வர்மா, பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நான்தாண்டா விரைவில் திரைக்கு வருகிறது.

Share |
Previous Page Next Page HOME