கோபத்தில் சந்தானத்தை திட்டிய பிரபல டைரக்டா்

 
இந்த வாரம் இரண்டு முன்னனி வார இதழ்களில் சந்தானத்தின் பேட்டி வெளியாகி இருந்தன. அதில்  சந்தானமும், ரஜினியும் இருக்கும்
புகைப்படங்கள் இடைச்சொறுகலா வெளியாகி இருந்தன.  பிரத்யேமாக சந்தானத்திடம் வழங்கப்பட்ட லிங்காவின் புகைப்படங்களை படத்தின்
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரிடம் அனுமதி வாங்காமல் அவர் பிரஸ்க்கு வெளியிட்டுவிட்டாராம். இதனைத்தொடர்ந்து இந்த வாரம் வெளியான  வார இதழ்களில் அந்த ஸ்டில்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்காக பல்வேறு தரப்பில் இருந்த சந்தானத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. அதேநேரம் கடும் கோபமமைடந்தத கே.எஸ்.ரவிக்குமார் தனிப்பட்ட முறையில் அர்ச்சனையையும் அனுப்பி வைத்தாராம்.

இந்த நேரத்தில் இன்னொரு சம்பவம் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. லிங்கா படத்தில் ராதாரவியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரிடம் ஒரு பிரபல நாளிதழ் நிருபர் பேசிக்கொண்டிருந்த போது லிங்கா குறித்து  நிறைய விஷங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிருபரிடம் அவர் காட்டியிருக்கிறாராம்.  அண்ணே ,,, இந்த படத்தில் ரஜினி எவ்வளவு இளமையாக இருக்கிறாா் அதனை கொடுத்தால் மக்களுக்கு காட்டிடலாம் என்று  நிருபர் கேட்டாரம். ஆனால் இயக்குனரின் அனுமதி இல்லாமல் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். இதுதான் மூத்த நடிகர்களுக்கும். இளைய நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம்..

Tags: santhanam news, santhanam latest news, K.S.Ravikumar, director K S. Ravikumar news,  சந்தானம், கே.எஸ்.ரவிகுமாா், தமிழ் சினிமா செய்திகள்

Share |
Previous Page Next Page HOME