அந்த போட்டோ பெரிய ஷாக்தான்: அனிருத்

ஏ.ஆர். ரகுமானுக்கு பிறகு முதல் படத்திலேயே எல்லா பாட்டும் ஹிட் கொடுத்து சாதனை படைத்தவர் அனிருத். இவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். ஒரு பக்கம் புகலும், மறுப்பக்கம் சர்ச்சையும், இவரை சுற்றி வருகின்றன.

ஆண்ட்ரியாவுக்கு இவர் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக பரவி அதிர்ச்சியளித்தது நம் அனைவருக்கும் தெரியும். இது குறித்து அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.

இதில் ” ’கொலவெறி வைரல்’னு இன்டர்நெட் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் நான். என்னை வளர்த்த அதே இன்டர்நெட் என் இமேஜை டேமேஜும் பண்ணுச்சு. எனக்கு அந்த போட்டோ பெரிய ஷாக்தான். ரொம்ப நொந்துட்டேன். எனக்கே அப்படின்னா, வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. ஆனா, கடவுள் புண்ணியத்துல வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க.

ரொம்ப ஆறுதலாப் பேசினாங்க. ரெண்டு நாள் உடைஞ்சுபோய் இருந்தேன். 'இது இன்டர்நெட் காலம். எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல பழைய மேட்டர்தான். நாளைக்கே வேற ஒரு விஷயம் வைரல் ஆச்சுன்னா, மக்கள் உன்னை மறந்துருவாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.”என்று கூறியுள்ளார்.

Share |
Previous Page Next Page HOME