போதையில் பூனம் பாண்டேயை ஓட ஓட விரட்டிய ரசிகர்கள்

இந்தி நடிகை பூனம் பாண்டேயை ரசிகர்கள் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் இரவு விடுதியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பூனம்பாண்டே அதிர்ச்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

பெங்களூர் ‘கிளப்’ ஒன்றில் புத்தாண்டையொட்டி என்னை நடனமாட அழைத்து இருந்தனர். இதற்காக நிறைய பணம் கொடுத்தார்கள்.

நான் மேடை ஏறி ஆட துவங்கினேன். ஏராளமான ஆண்கள் குடிபோதையில் என்னை சுற்றி இருந்தார்கள். நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருந்தபோது சிலர் திடீரென மேடையை சுற்றி போடப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்தனர். இதனால் கூட்டத்தினர் மேடை நோக்கி ஓடி வந்தார்கள். கையை பிடித்து இழுத்து அத்துமீறி நடந்தார்கள். எல்லோருமே குடித்து இருந்தனர். என்னை பலாத்காரம் செய்யும் ஒரே நோக்கமே அவர்களிடம் மேலோங்கி இருந்தது.

நான் அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து ஓடினேன். ஆனாலும் விடாமல் துரத்தி வந்தனர். நான் தங்கி இருந்த அறைக்கும் துரத்தி வந்தனர். கிளப் நிர்வாகத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்த ஆட்கள் போதுமானதாக இல்லை. அவர்களால் குடிகாரர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டேன். நான் மற்ற நடிகைகளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் பணத்துக்காக யாரும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆட போகாதீர்கள்.

Share |
Previous Page Next Page HOME