விஜய்யை முந்திய ஸ்ரீப்ரியா. மோகன்லால் அதிர்ச்சி

மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தை இயக்கிய பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா, மோகன்லால், மீனா நடித்த த்ரிஷம் என்ற மெகாஹிட் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இந்த படத்தை தமிழில் பிரமாண்டமாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தயாரிப்பாளரை அவர் தேடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தின் உரிமையை முதலில் விஜய் வாங்குவதாகத்தான் இருந்தது. மோகன்லாலும் விஜய்க்கு அந்த படத்தின் ரீமேக்கை வாங்கித்தர முயற்சி செய்தார். ஆனால் ஸ்ரீப்ரியா இவர்களுக்கு முன்பாகவே தயாரிப்பாளரிடம் பேசிமுடித்து ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார். இதனால் விஜய் மட்டுமல்ல மோகன்லாலும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

த்ரிஷம் படத்தின் கதையை கேட்டதும் விஜய் அந்த படத்தில் நடிக்கவிரும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்தார். விக்ரமும் இந்த படத்தின் மீது ஒரு கண் வைத்துள்ளார். குடும்ப செண்டிமெண்டுடன் த்ரில்லிங் கலந்த கதை இருவரையும் ரொம்பவே கவர்ந்துவிட்டது. இந்த படத்தில் அனேகமாக விக்ரம் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் "ஐ" படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும். அதன்பின்னர் இந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவெடுக்க உள்ளார்.

இந்த படத்தில் மீனாவின் கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அந்த கேரக்டரில் நடிக்க மெச்சூரிட்டியான நடிகையை தேடிக்கொண்டிருப்பதாக ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார். டிசம்பர் 19ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக கேரளா முழுவதும் சக்கைபோடு போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

Share |
Previous Page Next Page HOME