புலிகளுடன் முத்தழகு

புலிகளுடன் புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் முத்தழகு.

நடிகை ப்ரியாமணி புத்தாண்டை கொண்டாடுவதற்காக குடும்பத்தினரோடு பாங்காக் சென்றுள்ளார்.

அங்கு புலிகள் கோவிலுக்கு சென்ற இவர் புலிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில், ஒரு படத்தில் பிரியாமணியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கிறது ஒரு புலி. மற்றொரு படத்தில் புலியை வருடிக் கொடுத்தவாறு போஸ் தந்துள்ளார்.

பொதுவாகவே பிராணிகள் நலனில் அக்கறைக் கொண்ட இவர், அங்கு சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த புலிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

Share |
Previous Page Next Page HOME