அதற்கு பிரபுதேவாதான் காரணம்?

பிரபுதேவா இயக்கும் இந்தி பட ஷூட்டிங் முடியாததால் சிங்கம் 2 பட ரீமேக் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிக்க ஹரி இயக்கத்தில் உருவான படம் சிங்கம். இப்படம் இந்தியில் சிங்ஹம் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். சூர்யா நடித்த வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்கினார். இப்போது இதன் இரண்டாம் பாகமாக சிங்ஹம் 2 உருவாகி வருகிறது. ஆனால் இப்படத்துக்கும் சூர்யாவின் சிங்கம் 2 படத்துக்கும் சம்பந்தமில்லை. வரும் பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அஜய் தேவ்கன் தற்போது பிரபு தேவா இயக்கும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் நடித்து வருகிறார். இம்மாதம் இதன் ஷூட்டிங் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ஆர் ராஜ்குமார் படம் ரிலீஸ் ஆனதால் அதற்கான புரமோஷன் பணிகளில் பிரபு தேவா பிஸியானார். இதனால் ஆக்ஷன் ஜாக்சன் ஷூட்டிங் நின்றுபோனது.

ஆக்ஷன் ஜாக்சன் படத்தை முடித்துவிட்டு சிங்ஹம் 2வில் நடிக்க முடிவு செய்துள்ளார் அஜய். இதுதொடர்பாக ரோஹித் ஷெட்டியும், அஜய் தேவ்கனும் சந்தித்து பேசினர். அப்போது சிங்ஹம் 2 பட ஷூட்டிங்கை ஏப்ரலுக்கு தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.

Share |
Previous Page Next Page HOME