ரூ.6 கோடியில் புத்தாண்டை வரவேற்கும் ப்ரியங்கா சோப்ரா

புத்தாண்டு பார்ட்டியில் நடனம் ஆடுவதற்கு ரூ.6 கோடி வாங்கியுள்ளாராம் ப்ரியங்கா சோப்ரா.

புத்தாண்டை வரவேற்க நள்ளிரவில் ஹோட்டல்களில் நடக்கும் பெரிய பார்ட்டிகளில் நடிகர், நடிகைகளை ஆட வைப்பது வழக்கமாகிவிட்டது.
இந்த புத்தாண்டு பார்ட்டிகளில் இதுவரை பிரியங்கா சோப்ரா நடனம் ஆடியது இல்லை.

இந்நிலையில் அவர் வரும் 31ம் தேதி இரவு சென்னையில் நடக்கும் புத்தாண்டு பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடவிருக்கிறாராம்.
புத்தாண்டு பார்ட்டியில் வெறும் 7 நிமிடங்கள் தான் டான்ஸ் ஆடுகிறார். அதற்கே இவர் ரூ.6 கோடி கேட்டுள்ளாராம்.

7 நிமிடம் ஆட ரூ.6 கோடி என்பது கொஞ்சம் ஓவர் என்றாலும் டிக்கெட் வருமானம் மூலம் அதை சரி கட்டிவிடலாம் என்று ரூ.6 கோடி கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம்.

Share |
Previous Page Next Page HOME