சென்னை: அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திலும், விஜய் ஜில்லாவிலும் போலீசாக நடிக்கிறார்களாம். இது போலீஸ் சீசன் போன்று. சூர்யா போலீஸாக நடித்துள்ள சிங்கம் 2 படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இதையடுத்து சிங்கம் 3 வரும் என்று கூட பேச்சு அடிபடுகிறது. சூர்யாக முன்னதாக காக்க காக்க படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புச்செல்வன் ஐபிஎஸ் கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
அஜீத் குமார் மங்காத்தா படத்தில் போலீஸ்காரராக நடித்தார். படம் முழுக்க காக்கியில் வராவிட்டாலும் ஏதோ சில காட்சிகளில் சீருடையில் வந்தார்.
விஷ்ணுவரதனின் பெயரிடப்படாத படத்திலும் அஜீத் குமார் போலீசாக வருகிறாராம்.
விஷ்ணுவரதன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்தின் தலைப்பு பறவை இல்லையாம். தலைப்பு 'A' என்ற எழுத்தில் துவங்குகிறதாம்.