அதை கட்டிப்பிடித்து தூங்கினால்தான் தூக்கமே வருகிறது: அமலா பால்

அமலா பால் தனது செல்ல பிராணியான நாயை அருகில் படுக்க வைத்து கட்டி பிடித்து தூங்குவதை பழக்கமாக வைத்திருக்கிறார்.

நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படுகிறது பீட்டா. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக பல நடிகர்,நடிகைகள் உள்ளனர்.

இதில் தீவிரமாக கவனம் செலுத்தும் த்ரிஷா தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும்படி அட்வைஸ் தருவதுடன் தானே அதுபோல் பல நாய்களை தத்தெடுத்து வளர்க்கிறார். சமீபத்தில் இந்த அமைப்பில் உறுப்பினராக இணைந்தார் மதராசபட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன்.

பல ஹீரோயின்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கின்றனர். இதற்காக பிரத்யேக ஏசி ரூம் அமைத்து கொடுத்து அதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் செல்ல பிராணியுடன் கொஞ்சி விளையாடி பொழுதை போக்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதில் ஒருபடி மேலே போய் தனது செல்ல நாய்குட்டியை எங்கும் அலைய விடாமல் தான் உறங்கும்போது தன் அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுடன் அதை கட்டிப்பிடித்து தூக்கத்தில் ஆழ்கிறார் அமலா பால்.

இதற்கு முன் அவருக்கு இப்படி பழக்கம் கிடையாதாம். ஆனால் தனது செல்ல நாய்க்குட்டி மீது பாசம் அதிகரித்த பிறகு அதை கட்டிப்பிடித்து தூங்கினால்தான் தூக்கமே வருகிறதாம்.

Share |
Previous Page Next Page HOME