ரஜினி குறித்து அவதூறு கருத்து பரப்பல்: நடிகர் புரோட்டா சூரி போலீஸ் கமிஷனரிடம் புகார்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் புரோட்டா சூரி தற்போது ஏராளமான படங்களில் நடித்து முன்னணியில் உள்ளார். புரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார் அதில் அவர் கூறி இருப்பதாவது:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நான் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வருகிறேன். பொது விவகாரங்களில் தலையிடுவதோ அல்லது எதைப் பற்றியும் கருத்து சொல்வதோ கிடையாது. ஆனால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாகபேசியிருப்பதாக கூறி சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கருத்து கேட்டார்கள்.

பதறிபபோன நான் அது பற்றி விசாரித்த போது எனது பெயரில் விஷமிகள் சிலர் பேஷ்புக்’ கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது.டுவிட்டர்-பேஷ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 பேஷ்புக் கணக்குகள் தொடங்கி எனக்கு எதிரான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே, எனது பெயரி லான பேஷ்புக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share |
Previous Page Next Page HOME