‘ஜில்லா’ படப்பிடிப்பில் பிரச்சனை

தலைவா வெளியீட்டு சிக்கல் முடிந்து ஒருவழியாக ஜில்லா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நடிகர் விஜய்.
தற்போது சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளது.

பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும்.

இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளதாம்.

கடந்தவாரம் விஜய் காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பின் இடைவேளையின்போது 15 வயது சிறுமியான ஜூனியர் நடிகை ஒருவர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்க, பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஒருவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட பிரச்சனை கிளம்பியுள்ளது.

ஒரே கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே ரணகளப்பட அந்த சிறுமியின் உறவினர்கள் போலிசில்ல் புகார் கொடுக்கப்போவதாக சொல்ல ஜில்லா படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தினசரி கவனித்து வரும் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இந்த பிரச்சினையில் தலையிட்டிருக்கிறாராம்.

நடந்த பிரச்சினையை கேட்டறிந்த ‘ஜித்தன்’ ரமேஷ், அந்த காவாலாளியை ஜில்லா படப்பிடிப்பிற்கு வரக்கூடாது என்று கூறியதோடு, அந்த சிறுமியையும் இனி படப்பிடிப்புக்கு நடிக்க வரவேண்டாம் என்று கூறிவிட்டராம்.

ஜில்லா திரைப்படத்தில் விஜய் போலிஸ் கதாபாத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share |
Previous Page Next Page HOME