எம்.ஜி.ஆருக்கு டப்பிங் பேச மறுத்த அஞ்சலி!

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் முதலானோர் நடித்து வருகிற 6-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் படம் ‘மதகஜராஜா’. ‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை விநியோகம் செய்யும் உரிமையை விஷாலின் ’விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் சமீபத்தில் நடந்தது. அப்போது முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் பேச சம்மதம் தெரிவித்திருந்த அஞ்சலி, டப்பிங் பேச மறுத்து விட்டாராம். படக்குழுவினரிடம், ‘’இனி எனக்கு தமிழ் சினிமாவிற்கு வரும் எண்ணம் இல்லை, அதனால் வேறு யரையாவது வைத்து டப்பிங் முடித்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறிவிட்டாராம் அஞ்சலி. ஆனால் அஞ்சலி சமீபத்தில் யாரையோ திருமணம் செய்துகொண்டு தற்போது தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Share |
Previous Page Next Page HOME