பெங்களூர் விமான நிலையத்தில் பிரபல நடிகை மானபங்கம் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி் கொண்டிருப்பவா் கிரீத்தி கர்பந்தா. ரவிதேஜா நடித்து தெலுங்கில் ஹிட்டான ‘கிக்’ படத்தின் ரீமேக்கில் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் கிரீத்தி கர்பந்தா இணைந்து நடித்து உள்ளார். தற்போது ஆறு கன்னட படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இவ்வளவு பிரபலமான கிரீத்தி விமான நிலையத்தில் மானபங்கம் செய்யப்பட்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கிரீத்தி கூறியதாவது:-
பெங்களூர் விமான நிலையத்தில் நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரி ஒருவர் என்னை
நெருங்கினார். திடீரென என்னிடம் சில்மிஷங்கள் செய்து கேவலமாக நடந்து கொண்டார். நான் தடுத்ததும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி னார். இதை சில ஏர் இந்தியா ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எனககு உதவ வருவார்கள். என எதிர்பார்த்தேன் ஆனால் யாரும் வரவில்லை. எல்லோருமே அவர்களுடைய அதிகாரிக்கு தான் ஆதரவாக இருந்தார்கள். இந்த சம்பவம் என் மனதை மிகவும் புண் படுத்தி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()



