வீட்டிற்கு வந்த முருகதாஸ்: கிளம்ப சொன்ன விஜய்?

கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மயங்கி விழுந்த முருகதாஸை மருத்துவமனையில்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் விஜய். விஜய் ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்துபோனதாக முருகதாஸ் கூறிவந்தார். ஆனால் அதற்கு பின் வந்த தகவல்தான் சற்றே அதிர்ச்சி ரகம். அதாவது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் முருகதாஸ் விஜய சந்திக்க சென்றதாகவும், ஆனால் விஜய் சரியாக முகம் கொடுத்து பேசாமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிலர் தெரிவிக்கையில் ஆமாம் அது உண்மைதான் என்கிறார்கள்.காரணம் கத்தி கதை என்னுடையது என்று ஒரு உதவி இயக்குனரை தனது உதவியாளர்கள் மூலம் சந்திக்க சொன்னாராம் விஜய். அப்போது தனது கதை திருட்டு தொடர்பாக பல விஷயங்களை ஆதாரங்களோடு கூறினாராம் அந்த உதவி இயக்குனர். இந்த கோபத்தில்தான் முருகதாசிடம் முகம் கொடுக்கவில்லை என்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் முருகதாஸை மிகவும் நம்பினாராம் விஜய். ஆனால் அவரது நம்பிக்கை முழுவதும் சுக்கு நூறானதுதான் விஜய்க்கு கோபமாம். இந்த படத்தை பிரச்னை இல்லாமல் வெளியிடலாம் என்று நினைத்தால் இப்படி ஒரு பிரசனையை உண்டு பன்னிட்டீங்களே என்ற விஜய், நான் எனது அடுத்த படத்திற்கு தயாராகிவருகிறேன். கத்தி படத்தை பத்தி பேச இனி ஒன்னும் இல்லை, கிளம்புங்க என்றாராம் விஜய்.

ஏற்கெனவே தன் படம் வெளியாவதற்குள் ஆயிரம் பிரச்னைகளை சந்திக்கும் விஜய், இந்த படத்தில் கதை திருட்டு பிரசனையில் உண்மை நிலை அறிந்து எப்படி கோபப்படாமல் இருப்பார்?

Tag: vijay,murugadoss,kaththi latest news,

Share |
Previous Page Next Page HOME