அஜீத் ஏன்தான் இப்படி நடக்கிறாரோ? : விவேக்

கிட்டத்தட்ட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குபின் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார் விவேக். கௌதம் மேனன் தன் படத்தில் விவேக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஜீத்திடம் கூற, மறுப்பேதும் கூறாமல் ஓகே சொன்னாராம் அஜித். பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்புக்கு
சிக்கிம் மாநிலத்திற்கு சென்றார்கள் படக்குழுவினர். விமானத்தில் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்த அஜீத் விவேக் இருவரும் மனம் விட்டு பேசிவந்தார்களாம். திடீரென அஜீத் தன் கையில் அவர் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தை கழற்றி அப்படியே விவேக் கையில் கட்டிவிட்டாராம். இந்த சம்பவத்தில் நெகிழ்ச்சியில் உறைந்து போனாராம் விவேக்.

பின்னர் சிக்கிமில் இறங்கி இருவரும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரே காரில் சென்றார்களாம். காரை ஓட்டிய டிரைவர் தனக்கு வரும் போன் அழைப்புகளை மிகவும் சிரமப்பட்டு பேசிக்கொண்டிருந்தாராம்.காரணம் அந்த போன் அந்த அளவிற்கு பழமையானதாக காணப்பட்டதாம். விவேக்கிடம் பேசிக் கொண்டே டிரைவரின்  நடவடிக்கையும் கவனித்து வந்த அஜீத், வண்டி ஷாப்பிங் கடையை பார்த்ததும் காரை நிறுத்தி கீழே இறங்கி திரும்பி வரும்போது கையில் விலை உயர்ந்த ஐ போன்.

அதுமட்டுமல்லாமல் டிரைவரின் பழைய போனை வாங்கி அதிலிருந்த சிம்கார்டை எடுத்து புதிய போனில் மாட்டிக்கொடுத்து இனி இதுல பேசுங்க என்று கொடுத்தாராம்.டிரைவருக்கோ இனம் புரியாத அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி. இதனை கண்ட விவேக்குக்கு அதைவிட அதிர்ச்சி.

சென்னை திரும்பிய விவேக், தன் நெருக்கமான பத்திரிக்கையாளர்களிடம் அஜீத் சார் ஏன்தான் இப்படி இருக்காரோ? என்று நடந்த அந்த சம்பவத்தை சொல்லி வருகிறாராம்.

அதனால்தான் அஜீத்துக்கு ரசிகர்களிடம் அவ்வளவு செல்வாக்குபோல

Tag: ajith,vivek, ajith latest news,

Share |
Previous Page Next Page HOME